
A Celebration of Devotion and Tamil Heritage
- Categories News&Events
- Date August 23, 2025
ஆதித்யாவின் பாரம்பரிய பூங்காவில் ஆலமரத்தின் விழுதினை (பாரம்பரியத்தை) மீண்டும் புதுப்பிக்கும் வண்ணம் நம் மாணவச் செல்வங்களிடையே தமிழ் கடவுளான முருகனின் திருவருளோடு திருப்புகழ் பாராயணம் செய்யும் போட்டி நடைபெற்றது.பக்தியும் தமிழும் இரு கண்ணென வளர்த்த நம் மூதாதையர்கள் (தமிழர்களைப்) போல், நம் பாரம்பரியம் வழியாக , தமிழ் மொழியை நாம் ஆதித்யாவில் வளர்க்கத் தொடங்கிய நாள்…இன்று நம் பள்ளி முதல்வர் அவர்களின் முயற்சியால் மழலையர் பிரிவு முதல் 12-ம் வகுப்பு வரையிலான நாப் பயிற்சிக்கு முதன்மையான திருப்புகழ் பாராயணம் செய்யும் போட்டி இனிதே நடைபெற்றது . அதில் கலந்துகொண்டு எம் பள்ளி மாணவர்கள் வியப்படையச் செய்யும் வகையில் திருப்புகழைப் பாராயணம் செய்தனர்.
You may also like

A Thought-Provoking Round Robin by Grade 6 Adityans
28 August, 2025

TCK Branch Celebrates Vinayagar Chaturthi with Joyful Hearts
26 August, 2025